Sunday, March 21, 2010

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேசுவரர் திருக்கோவில், திருலோகி

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேசுவரர் திருக்கோவில், திருலோகி.

அமைவிடம்
தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் காவிரியின் கிளை நதியான பழவாற்றின் வடகரையில் திருப்பனந்தாள், கஞ்சனூர், திருக்கோடிக்காவல் மற்றும் திருவெள்ளியங்குடி ஆகிய ஊர்களின் மையத்தில் திருப்பனந்தாளிலிருந்து ஆடுதுறை செல்லும் சாலையில் 8கிமீ சென்று இவ்வூரை அடையலாம். கும்பகோணம் – பூம்புகார் சாலையில் கோட்டூர் என்று வழங்கும் 'துகிலி' ஊரையடைந்து, அதைத் தாண்டி, "திருலோக்கி 5 கி. என்று வழிகாட்டிப் பலகையுள்ள இடத்தில் (இடதுபுறம்) திரும்பிச் சென்றால் கீழசூரியமூலை, வழியாகவும் இவ்வூரையடையலாம். இவ்விரு ஊர்களின் நிலைமையை திருப்பனந்தாளிலோ அல்லது ஆடுதுறையிலோ விசாரித்துக்கொண்டு, பிறகு உரிய பாதையில் செல்வது நல்லது.

திரைலோக்கிய சுந்தரம் - (திருலோக்கி)
இறைவர் திருப்பெயர் : சுந்தரேஸ்வரர், சுந்தரம்

இறைவியார் திருப்பெயர் : அகிலாண்டேஸ்வரி.

தல மரம் : சரக்கொன்றை.
தீர்த்தம் : லட்சுமி தீர்த்தம்.

வழிபட்டோர் : பிருகுமுனிவர், தேவகுரு முதலியோர்.

திருவிசைப்பா பாடல்கள் : கருவூர்த்தேவர் - திருவிசைப்பா.

தல வரலாறு
• ஏறத்தாழ சுமார் 5000 ஆண்டு பழமையான இத்திருத்தலம் சைவ வைணவ ஒற்றுமைக்கு சான்றாக விளங்கி சோழர்கள் மற்றும் பல்லவ சாம்ராஜ்ஜியத்தினரால் திருப்பணி செய்யப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
• திரைலோக்கிய மாதேவி என்பவள் முதலாம் இராசராசனின் மனைவியர்களுள் ஒருத்தியாவாள்; சுவாமி பெயர் சுந்தரேசுவரர்; இவையிரண்டும் சேர்ந்து இத்தலத்திற்குத் திரைலோக்கிய சுந்தரம் என்று பெயர் வழங்கியது போலும்.
• முதலாம் இராசேந்திர சோழனின் கல்வெட்டொன்றில் இவ்வூர் 'திரைலோக்கிய மாதேவிச் சதுர்வேதி மங்கலம்' என்று குறிக்கப்பட்டுள்ளது.
• கல்வெட்டில் இத்தலம் விருதராச பயங்கர வளநாட்டு மண்ணி நாட்டு தைலோக்கி ஆகிய சதுர்வேதி மங்கலம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
• திருமகள் திருமால் மனதில் இடம் பெற வேண்டி தீர்த்தம் உருவாக்கி பெருமாள் மற்றும் அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வரரையும் வணங்கி திருமார்பில் இடம் பெற்றார் என்றும் கூறப்படுகின்றது. அவ்வாறு தவம் புரியும் வேளையில் திருமகளின் நாளங்களானது வில்வ விருட்சமாக (ஸ்ரீ பத்ரம்) உருவாகி இத்திருத்தலத்தில் சைவ வைணவ ஆராதனைக்குரியதாக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.


கோவில் அமைப்பு
• கோயிலின் உள்ளே நுழைந்ததும் கருவறையில் இறைவனும் இறைவியும் கிழக்கு திசை நோக்கி அருள் பாலிக்க, மகா மண்டபத்தில் ரிஷபாரூடர் வடக்கு திசை நோக்கி தரிசனம் தருகிறார். உட்பிரகாரத்தில் நால்வர், விநாயகர் திருமேனிகள் உள்ளன. சண்டிகேசுவரர் திருமேனியும் தனித்து உள்ளது.

வடக்கு புற கோட்டத்தில் பிரம்மா, துர்க்கையும் கிழக்கே, பைரவரும் பிச்சாடனரும் அமர்ந்துள்ளனர். இக்கோயிலில் காலை, சாயரட்சை என இரண்டு கால பூஜை மட்டுமே நடைபெறுகின்றன. இந்த ஆலயத்தின் தல விருட்சம் "கொன்றை'.

இந்த ஆலயத்தில், இறைவன் சுந்தரேசுவரர் அன்னை அகிலாண்டேசுவரியை அணைத்தபடி நந்தியின் மீது கம்பீர கோலத்தில் வீற்றிருக்கிறார். இருவரையும் எதிரே நின்றபடி குருபகவான் வணங்கிக் கொண்டிருக்கிறார். குரு பகவானின் இந்த அற்புதக் கோலம் வேறு எங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும்.


• தம்பதி சமேதராய் நந்தி வாகனத்தில் காட்சி தரும் ரிஷபாரூடரான சிவபெருமானையும் உமாதேவியையும், ரதி மன்மதனை ரட்சிக்கும் பொருட்டு இவர்களை வணங்கும் குருபகவானையும் வணங்குவதால் பாவங்கள் கரைந்து வளமான வாழ்க்கை அமையும். தவிர தம்பதிகளிடையே நிலவும் மனக் கசப்பு அகன்று, பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேருவர் என பக்தர்கள் நம்புகின்றனர்.
ரிஷபாரூடராக சுந்தரேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி:

ரதி மன்மதன்:





சிறப்புக்கள்
• இத்தலத்திற்கு - ஒன்பதின்மரில் கருவூர்த்தேவர், திருவிசைப்பா பாடியுள்ளார்.
• இவர் (கருவூர்த் தேவர்) பாடியுள்ள இத்தலத்து திருவிசைப்பா பதிகத்தில் முதலிரு பாடல்கள் தலைகூற்றாகவும் ஏனையவை தோழி தலைவனிடம் கூறும் கூற்றாகவும் அமைந்துள்ளன.
• ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் - சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது.
• இவ்வூரில் (1) சுந்தரேஸ்வரர் கோயில் (2) கயிலாயநாதர் கோயில் என்று இரு கோயில்கள் உள்ளன. இவற்றுள் சுந்தரேஸ்வரர் கோயிலே திருவிசைப்பா பாடல் பெற்றதாகக் கொள்ளப்படுகிறது.
• கோட்டூர் என்னும் திருமுறைப்பாடல் பெற்ற தலம் இதுவன்று, அதுவேறு. கோட்டீர் என்னும் இச்சிறிய கிராமமும் திலோக்கிய சுந்தரமும் முதல் இராசராசன் காலத்தில் ஒன்றாக இருந்தது போலும்.
• ஆவுடையாரில் சற்றே குட்டையான பாணவடிவில் சுந்தரேஸ்வரர் தரிசனம் தருகிறார்.
• மூலவருக்கு முன் உள்ள மண்டபத்தில் வலப்பால் ஆலிங்கன மூர்த்தி சிலாரூபத்தில் அருமையாகக் காட்சியளிக்கிறார். தோள்மேல் கைபோட்டு அம்பாளை அணைத்திருக்கும் லாவகமே தனியழகு.
• ஆலிங்கனமூர்த்திக்கு நேர் எதிரில் - ரிஷபத்தின் மீது (ரிஷபாரூடராக) சுவாமியும் அம்பாளும் வீற்றிருக்கும் அற்புதமான சிலாரூபம் - ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அதிசய அமைப்பு உடையதாகக் காட்சியளிக்கிறது. பின்புறத்தில் லிங்க வடிவமும் செதுக்கப்பட்டு உள்ளது.
• முதலாம் இராசேந்திர சோழனின் கல்வெட்டொன்றில் இவ்வூர் 'திரைலோக்கிய மாதேவிச் சதுர்வேதி மங்கலம்' என்று குறிக்கப்பட்டுள்ளது.
• கல்வெட்டில் இத்தலம் விருதராச பயங்கர வளநாட்டு மண்ணி நாட்டு தைலோக்கி ஆகிய சதுர்வேதி மங்கலம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
• திருமகள் திருமால் மனதில் இடம் பெற வேண்டி தீர்த்தம் உருவாக்கி பெருமாள் மற்றும் அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வரரையும் வணங்கி திருமார்பில் இடம் பெற்றார் என்றும் கூறப்படுகின்றது. அவ்வாறு தவம் புரியும் வேளையில் திருமகளின் நாளங்களானது வில்வ விருட்சமாக (ஸ்ரீ பத்ரம்) உருவாகி இத்திருத்தலத்தில் சைவ வைணவ ஆராதனைக்குரியதாக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.


திருலோகி என்ற தலம். வளமான வாழ்க்கை அமையவும், கைநிறைய சம்பாதிக்கவும் பிரிந்த தம்பதியரை இணைக்கும் குருவின் அருள் வேண்டும் ஆலயமாகவும் விளங்குகிறது . குருவின் அருளைப் பெற குரு பகவானை வழிபடுவதோடு அவர் சென்று வழிபட்ட கோயில்களுக்குச் சென்று அங்கு அருள்பாலிக்கும் இறைவனை வழிபடுவது மிகவும் நல்லது. இப்படி குருபகவான் வழிபட்ட தலம்தான் திருலோகி.

அவ்வாறான இத்தலமானது இன்று சிதிலமடைந்து வருகின்றது என்பது வேதனைக்குரிய விஷயமாகும், சிறு கிராமத்தில் அமைந்துள்ளதால், மக்களின் பொருளாதார நிலையும் கும்பாபிஷேகம் செய்ய பெறும் நன்னாளை எண்ணி ஏங்கும் நிலையில் உள்ளது. எனவே இன்று சேர்க்கும் பணத்தை விட நாம் அனுபவிக்கவிருக்கும் நற்பயனை எண்ணி திருக்கோவில் திருத்தொண்டானது அளவில் சிறிதோ பெரிதோ ஆனால் அவை அளிக்கவிருக்கும் புண்ணியங்கள் நமக்கும் மட்டும் இன்றி நம் பிற்கால சந்ததியினருக்கான உண்மையான சொத்தாக பேருதவி புரியும் என்பது திண்ணம் எனக் கொண்டு நல்லுள்ளம் படைத்த பக்தர்களின் நல்வரவை நாடி அவர்களுக்கு அருள்பாலிக்க காத்து கொண்டிருக்கின்றது இத்திருத்தலம்.

4 comments:

  1. The videos as well as the sthala puranam takes you on a guided tour of the temples and the village.
    Simply wonderful and fascinating.

    ReplyDelete
  2. sir, your blog is simply suppoorb , i have more proud for born this village.

    ReplyDelete
  3. Dear Friends,

    Got some good news from village people that lot of people are coming and devotees helping to the development of the temple.Thanks for the visitors and broadcasters.

    ReplyDelete
  4. அகிலாண்டேசுவரி உடனுறை சுந்தரர், க்ஷீரநாயகி, உடனுறை க்ஷீராப்தி சயன நாரணன் தலப்பெருமை அருமை இவ்வூரினன் என்பதில் எளியேனுக்கும் பெருமை.

    ReplyDelete